Sri Lanka: reconciliation and justice

மூன்றாவது வெற்றி அணிவகுப்புக்கான ஏற்பாடுகள் பூர்த்தி

எதிர்வரும் 19 ஆம் திகதி நடைபெறவுள்ள மூன்றாவது வெற்றிநாள் கொண்டாட்டத்திற்கான சகல எற்பாடுகளும் கொழும்பு காலிமுகத்திடலில் சிறப்பாக ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் இன்று (மே 17) இந்நிகழ்வின் ஏற்பாடுகளை மேற்பார்வை செய்ததுடன் வெற்றி அணிவகுப்பையும் ஒத்திகை பார்த்தார்.

இந் நிகழ்வில் பாதுகாப்புச் செயலாளருடன், பாதுகாப்புப் படைகளின் பிரதானி, முப்படைத் தளபதிகள் மற்றும் பல இராணுவ அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

மூன்று தசாப்த காலமாக இலங்கையைப் பீடித்திருந்த பயங்கரவாதம் 2009 ஆம் ஆண்டு நாட்டில் இருந்து முற்றாக ஒழிக்கப்பட்டதுடன், இலங்கை மக்கள் தற்போது நிம்மதியாகவும் சுதந்திரமாகவும் வாழக்கூடியதாக உள்ளது.எனவே இவ் வெற்றிநாளைக் கொண்டாடும் முகமாக அனைத்து மக்களும் அழைக்கப்படுகின்றனர்.

இதன் பிரதான நிகழ்வுகள் முப்படைகளின் பிரதானி அதிமேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் நடைபெறவுள்ளமை குறிப்பிடதடத்தக்கது.

பலாலி ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி தனியாக இயங்க அமைச்சர் நடவடிக்கை

பலாலி ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி தனியாக இயங்க அமைச்சர் நடவடிக்கை
யாழ்.பலாலி ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையை கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையுடன் இணைப்பது தொடர்பில் அண்மையில் எழுந்துள்ள பிரச்சினைக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நிரந்தர தீர்வினை பெற்றுக் கொடுத்துள்ளார்.

பழைமை வாய்ந்ததும் முன்னணி ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையுமான பலாலி ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியானது கடந்த கால அழிவு யுத்தம் காரணமாக உயர் பாதுகாப்பு வலையத்தினுள் அமைந்திருந்ததனால், அதன் செயற்பாடுகள் திருநெல்வேலி, முத்துத்தம்பி பாடசாலையில் குறுகிய இடத்தில் குறைபாடுகளுடன் மேற்கொள்ளப்பட்ட வந்த நிலையில் இதனை கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையுடன் இணைப்பது தொடர்பிலான கருத்துக்கள் அண்மைய காலமாக நிலவி வந்தன.

“மே பதினெட்டாம் திகதியும் மேதகு இலங்கை பிரஜைகளும்”

“நமது தாய் நாடானதும் நமது மூதாதயர்கள் 2600 ஆன்டுகள் வாழ்ந்ததுமான இலங்கை குடியரசின் குடிமக்களாய் இருப்பதிலும் நாம் பெருமை அடைகிறோம் . இலங்கையின் தேசிய தனித்துவத்தின் பிரிக்கமுடியாத ஒற்றுமையின் ஒரு அங்கம் நாம். ஒவ்வொரு முஸ்லிமின் கடமை என்னவென்றால் இலங்கை குடியரசின் ஒற்றுமைக்கும் , வலிமைக்கும், இறைமைக்கும், அச்சமின்றி சுயநலமின்றி உழைத்தலாகும்”
கலாநிதி பதியுதின் மஹ்முத் இலங்கை அரசு சென்ற வருட மே மாத யுத்த வெற்றியினை ஓராண்டின் பின்னர் இம்மாதம் 11 ம் திகதி தொடக்கம் 18ம் திகதி வரை யுத்த வீரர்கள் ஞாபகார்த்த தினமாக பிரகடன‌ப்படுத்தி நாடு முழுவதும் நினைவு கூரும் நிகழ்சிகளை நடாத்தியுள்ளனர்.இந்த யுத்த வெற்றி பல பெறுமதிமிக்க பொது மக்களினது உயிர்களையும் காவுகொண்டுள்ளது என்பதற்கு அப்பால் , இந்த உள்நாட்டு யுத்தம் மூன்று தசாப்தஙகளாக பலரை அங்கவீனர்களாக மனநோயாளிகளாக உடமைகளும் இடமும் இழந்த மக்களாகவும் மாற்றியுள்ளது என்பதையும் மறுப்பதற்கில்லை. இந்த ஈடு செய்யமுடியாத இழப்புக்களின் மத்தியில் இவ் யுத்த வெற்றிக்காக பல சிங்கள தமிழ் முஸ்லிம் இளைஞர்களும் இவ்யுத்தத்தில் பங்காளிகளாகி ஆயிரக்கனக்கில் உயிரை அவயங்களை இழந்திருக்கிறார்கள்.

சாதாரன பொதுமக்களும் ஆயிரக்கனக்கில் இவ்யுத்தத்தில் சிக்குன்டு பலியாகி இருக்கிரார்கள். இரண்டு இனங்களுக்கிடையிலான சிவில் யுத்தமாக முகிழ்த்த ஆயுதம் தாங்கிய போராட்டம் சக இனத்தின் மீதான அடக்குமுறை போராட்டமாக சகோதரப்படுகொலை “போராட்டமாக” கட்டம் கட்டமாக நகர்ந்து இறுதியில் பயங்கரவாத யுத்தமாகி முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது எனவே இந்த யுத்தம் வெறுமனே தமிழருக்கு எதிரான யுத்த வெற்றி அல்ல. இந்த யுத்த வெற்றியினை அரசு ஒரு வார வெற்றி தினமாக கொண்டாடி முடியும் வாரத்தின் இறுதிக்கு முந்திய நாளான 17ம் திகதியினை பொதுமக்களையும் போராளிகளையும் நினைவுகூரும் துக்க தினமாக அனுஷ்டிக்கும் நாளாக நினைவு கூருமாறு சம்பந்தனின் தமிழரசுக்கட்சி வேண்டுகோள் விடுத்தது. ஆக அரச வெற்றியின் இறுதி நாளை துக்க நாளாக கொள்ளும் ஜனநாயக உரிமை ஒருபுறமிருக்க தமிழரசுக்கட்சி “போராளிகளை” நினைவுகூருமாறு கூறுவது எனபதுதான் அரசினை பொறுத்தவரை முரண்பாடானதாகும் ஏனெனில் இராணுவத்தினரின் அழிவுக்கும் அங்கயீனத்துக்கும் காரனமானவர்களாவிருந்த அரச படைகளின் எதிரிகளின் இழப்பினை நினைவு கூறுவது எதிரிடையான ஒரு நிகழ்வாகவே யுத்த வெற்றிக் கொண்டாட்டம் முடிவுக்கு வருகிறது.

சிறுகதை

2009 ஆண்டு இலங்கையில் வெளியான  நல்லுறவு பத்திரிகையில் பிரசுரமான இச்சிறுகதை காலப்பொருத்தம்  கருதி பிரசுரமாகிறது

அந்த சிறிய தீவுத் தேசம் அமைதியாகக் கிடக்கிறது. அங்கே யார் மீதும் யாரும் கொலையை ஏவிவிடவில்லை. யார்; மீதும் யாரும் குண்டுகளை வீசவில்லை. யாருக்கு விரோதமாகவும் யாரும் தற்கொலைக் குண்டுதாரிகளை பாயச்சொல்லவில்லை.

ஏனென்றால் சுமார் 30 வருடங்களாக அந்த தேசத்தை ஆட்டிப்படைத்த பரமபிதா பரலோகம் அடைந்துவிட்டார். யார் அந்தப் பரமபிதா? அவர் சர்வ வல்லமை கொண்டவர் என மக்கள் நம்பினர். தனக்குத் தானே பரமபிதா என்று பெயரிட்டுக்கொண்டவர் அவர். தன்னை மட்டுமே விசுவாசித்து தன்னையே தினமும் தோத்திரம் செய்யுமாறு ஜனங்களுக்கு அவர் கட்டளையிட்டார். தன்மீது விசுவாசம் வைப்பவன் மட்டுமே இப்ப+வுலகில் உயிர்வாழக் கடவர்கள் எனவும், அவர்களுக்கு மட்டுமே தனது பரலோக இராட்சியத்தில் இடம் இருக்கும் எனவும் அவர் அறிவித்தார். அவருக்கு விரோதமாகவோ, அவருடைய ராட்சியத்துக்கு விரோதமாகவோ வார்த்தைகளை விதைப்பவர்கள் உயிர்வாழத் தகுதியற்றவர் என அவர் கண்டார். வடக்கு, கிழக்கு திசைகளில் பரவிக்கிடந்த இராட்சியம் எங்கிலும் யார் யார் நீதிமான்கள் என்பதையும் அவரே தேர்ந்தெடுத்தார். அவரது விசுவாசிகளைப் போலவே அவர் தேர்ந்தெடுத்த அந்த நிதிமான்களும் அவரது இராட்சியத்தை புகழ்ந்தார்கள். அவருடைய வார்த்தை ஒன்றே நித்திய வாழ்வுக்கான ஆகாரம் என்று கூறி ஆர்ப்பரித்தார்கள்.

நீதிமான்களை மட்டும் அல்ல நியாயப்பிரமாணங்களையும் அவரே போதித்தார். அதற்காக நீதிமொழிகளையும் கூட அவரே சிருஸ்டித்தார். அவரது இராட்சியத்தில் அவரது விருப்பத்தின்படியே மாவிரன், மானிதன், நாட்டுப்பற்றாளன், தேசத்துரோகி என்று மனிதர்கள் வகைப்படுத்தப்பட்டனர். அவரால் தேர்ந்தெடுக்கப்பட்ட நீதிமான்களும் பரமபிதாவின் போதனையின்படியே பொதுஜனங்களுக்கு இப்பெயர்களை இட்டு நீதிவழங்கினார்கள். அதன்படியே ஜனங்கள் எல்லாம் அவருடைய வார்த்தைகளுக்கு கட்டுண்டு, விசுவாசித்து அவற்றையே பின்பற்றத் தொடங்கினர். அப்போது அவருடைய இராட்சியம் விசாலம் அடைந்தது. அந்த தனது இராட்சியத்தை பரிபாலிக்க அவர் பன்னிரு சீடர்களைத் தேர்ந்தெடுத்தார்.

அவர்களை நோக்கி இப்ப+லக ராட்சியத்தின் ஆசாபாசங்களில் இருந்து விடுபட்டு என்னை பின்தொடருங்கள். உங்களை மனிசர்களை பிடிக்கிறவனாக்குவேன் என்றார். அச்சீடர்களும் அவரது பிரசங்கத்தை கேட்டு அவரைப் பின்தொடர்ந்தனர். அப்போது அவர்களிடம் அவர் தனது பரமண்டல ஜெபத்தை மிக ரகசியமாக கற்பித்தார். “தட்டுங்கள் திறக்கப்படும்” “கேளுங்கள் கொடுக்கப்படும்” “தேடுங்கள் கிடைக்கும்” என்றார்.

யுத்த வெற்றி விழா கொண்டாட்டம் நாளை

Defence and Urban Development Ministry Secretary Gotabhaya Rajapaksa in the company of Chief of Defence Staff Air Chief Marshal Roshan Gunathilake, Army Commander Lt Gen Jagath Jayasuriya, Navy Commander Vice Admiral DWAS Dissanayake, Air Force Commander Air Marshal Harsha Abeywickrema and IGP N.K. Illangakoon inspecting the victory day rehearsals at Galle Face yesterday. Picture by Nissanka Wijeratne

வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களுக்கு இரட்டை பிரஜா உரிமை

கடல் கடந்த இலங்கையர்’ திட்டத்தின் கீழ் நடவடிக்கை:

வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களுக்கு இரட்டை பிரஜா உரிமை வழங்கும் திட்டமொன்றை ஆரம்பிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக பதில் ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன நேற்றுத் தெரிவித்தார்.

பிரஜா உரிமையற்ற இலங்கையர்களும் அவர்களது பிள்ளைகளும் இந்த நாட்டுக்கு வந்து தங்கிச் செல்லும் வகையில் குடிவரவு குடியகல்வு சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் கூறினார். இத்திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. இங்கு கருத்துத் தெரிவித்த பதில் அமைச்சர், லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன, இலங்கை பிரஜா உரிமையற்ற இலங்கை யர்களுக்கு இரட்டை பிரஜா உரிமை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

வெளிநாடுகளில் உள்ள அவர்கள் இலங்கைக்கு திரும்பவும் வந்து தங்கி செல்ல வழியமைக்கும் வகையில் ‘கடல் கடந்த இலங்கையர்’ என்ற இந்த புதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.

பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்வைத்த அமைச்சரவை பத்திரத்தின் படி இந்த திட்டம் முன்னெடுக்கப்பட வுள்ளது.

இரட்டைப் பதிவு பெற முதலில் இலங்கையில் தம்மை பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு பதிவு செய்யப்படுபவர்கள் குறைந்த பட்சம் 5 வருடங்கள் அரசாங் கத்தினால் கண்காணிக்கப் பட உள்ளனர். அதன் பின்னர் அவர்கள் இரட்டை பிரஜா உரிமை பெறுவதற்காக விண்ணப்பம் செய்ய தகுதி பெறுவர்.

இதேவேளை ஏதும் ஒருவருக்கு இரட்டை பிரஜா உரிமை வழங்குவதன் மூலம் நாட்டுக்கு நன்மை கிடைக்கும் என ஜனாதிபதி தீர்மானிக்கும் பட்சத்தில் பதிவு செய்யாமலே இரட்டை பிரஜா உரிமை பெற சலுகை வழங்கப்படும். ஏற்கனவே இரட்டைப் பிரஜா உரிமையுள்ளவர்களுக்கு இந்த புதிய திட்டத்தினால் எதுவித பாதிப்பும் ஏற்படாது என்றார்.

எம். எஸ். பாஹிம்

மே 18 தமிழர் வாழ்வில் ஒளி பிறந்த நாள்!

PIRABA DEAD 4

 

மே 18 நரகாசுரன் அழிந்து இலங்கைத் தமிழர் வாழ்வில் வசந்தம் வீசத் தொடங்கிய நாள். ஏறக்குறைய 30 வருடங்கள் இலங்கைத் தமிழர் வாழ்வு இருள் சூழ்ந்திருந்த காலம். பசி, பட்டிணி, அகதி வாழ்க்கை என்று தமிழர்கள் நாடோடிகளாக அலைந்த காலம். எல்லாவற்றிற்கும் முற்றுப் புள்ளி வைக்கப்பட்ட நாள் “மே 18”

ஈழத்து நரகாசுரா! அல்பிரெட் துரையப்பா முதற்கொண்டு மகேஸ்வரி வேலாயுதம் வரை துரோகிகள் என்று எத்தனை தலைவர்களைக் கொன்றாய்!பாடசாலை அதிபர்களைக் கொன்றாய்,பல்கலைக்கழக விரிவுரையாளர்களைக் கொன்றாய்,பல்கலைக்கழக மாணவர்கலைக் கொன்றாய்.ஊடகவியலாளர்களைக் கொன்றாய்.

யுத்தத்தின் சுவடு…

யுத்த வெற்றிக் கொண்டாட்டத்தை முன்னிட்டு கொழும்பில் பிரமாண்ட ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வரும் அதேவேளை, படையினரின் அணிவகுப்புக்கான ஒத்திகைகளும் இடம்பெற்று வருகின்றன. ஒத்திகையில் ஈடுபட்ட படையினர் ஓய்வெடுப்பதையும் ஒத்திகைகளில் ஈடுபட்டுள்ளதையும் படங்களில் காணலாம். (படங்கள் – ஏ.எப்.பி)

The Éclat in Raigama Tele Award Ceremony

A colorful galaxy of  stars shone in hotel Waters Edge at Battaramulla on Friday evening at the 8th Raigama Tele Award Ceremony which focused on screen creations telecast in the year 2011.The best tele drama Award was presented  to Sarath Dharmasiri who directed ‘Ethkanda Lihiniya’, a production of actress Nadeesha Hemamali. Damith Abeyratne bagged the best tele drama actress Award while Bimal Jayakody won the award for the best actor.

Nehara Peris  grabbed the Award for most popular tele drama actress for the fourth consecutive year and Saranga Dissanayake was voted for the best actor. The most popular tele drama  was ‘Sihin Piyapath’ of Upul Jayasinghe directed by Sandun Rajakaruna while Sudath Rohana also received several key awards for his ‘Swayanjatha’.
ITN became the most honored Channel in 2011 winning 18 Awards.

International Nurses Day celebrated in Temple Trees

The International Nurses Day celebration was held in Temple Trees on Monday (14) under the patronage of President Mahinda Rajapaksa.

The  International Nurses Day is  celebrated all over the world on 14th to mark the birth anniversary of Florence Nightingale, the founder of Professional nursing. The 2012 International Nurses Day was themed for “Closing the Gap: From Evidence to Action”
President offered People’s bank accounts to nurses and Nurses’ Union in return presented a memento to the President in appreciation of his service towards Nurses Service.
Minister of Health Maithreepala Sirisena, the Chairman of the  Public Services United Nurses Union Ven. Muruththettuwe Ananda Thero also addressed the meeting  attended by more than 5,000  nurses including nurses from North and East and Secretary, Ministry of Health, Dr. Ravindra Ruberu and Director General of Health Services, Ajith Mendis.

இராணுவத்தினரிடம் சரணடையாத புலி உறுப்பினர்கள் மக்கள் மத்தியில் வாழ்ந்து வருகின்றனர்:

இறுதிக்கட்டப் போரின் போது இராணுவத்தினரிடம் சரணடையாத தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள், மக்கள் மத்தியில் வாழ்ந்து வருவதாக பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நாள்தோறும் மறைத்து வைக்கப்பட்ட ஆயுதங்கள் மீட்கப்பட்டு வருகின்றன. சரணடையாதவர்கள் யார் யார் என்பது இன்னமும் புலனாகவில்லை. இவ்வாறு சரணடையாது மக்களுடன் மக்களாக புலி உறுப்பினர்கள் வாழ்ந்து வருவது நாட்டுக்கு பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.

பல நாடுகளில் இயங்கிவரும் சில அமைப்புக்கள் நாட்டின் ஸ்திரத்தன்மைக்கு குந்தகம் ஏற்படுத்த முயற்சி எடுத்து வருகின்றன என பாதுகாப்புச் செயலாளர் குறிப்பிட்டுள்ளார். புலிகள் மீண்டும் இயங்குவதற்கான சாத்தியங்கள் காணப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

Adding Rice Farmers to the Rio+20 Agenda

rice crops

The year 2011 was one of extremes for the small Sri Lankan village of Verugal.

Lying on the island’s Northeastern coast, Verugal began the year with incessant rainfall. Between January and February of 2011, the East coast received a year’s worth of rain, which destroyed over 7,000 hectares of rice crops in Verugal and about 17 percent of the country’s annual rice harvest. Some villages were cut off for weeks on end.

“I was working in a life jacket for over two weeks,” said Ponnabalam Thanesvaran, head of the Verugal divisional secretariat and the highest-ranking government official for the region. Just as the rains abated around September, Verugal fell foul of nature’s wrath once more, only this time weathering the flip side of the coin: drought.

Thanesvaran told IPS that between September and October his main task was providing drinking water to remote villages, some of which had been cut off by floods just nine months ago. “It was incredible how, within less than a year, we had a flood and a drought,” he observed.

With next month’s United Nations Conference on Sustainable Development, Rio+20, just around the corner, local experts are pushing for increased efforts to get the message on changing climate patterns out to the most affected and least informed populations – like rice farmers in rural Sri Lanka.

Super Singer Junior 3 : 13 mai 2012